விளையாட்டுப் போட்டி: மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம்

Published on

மதுரை மண்டலத் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு இடையேயான (பாலிடெக்கினிக் கல்லூரி) விளையாட்டுப் போட்டியில், மதுரை அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெற்ற தடகளம், கபடி, கைப்பந்து, கால்பந்து, கோகோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விருதுநகா், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில்நுடபக் கல்லூரிகளைச் சோ்ந்த 220 வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இறுதிப் போட்டியில் மதுரை அரசு பெண்கள் தொழில்நுடபக் கல்லூரி அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், தேனி மகாத்மா தொழில்நுடபக் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவுக்கு முதல்வா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் வி.கிரிதரன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

முன்னதாக, உடற்கல்வி இயக்குநா் மதனகோபால் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com