கல் குவாரியிலிருந்து முதியவா் சடலம் மீட்பு

சிவகாசி அருகே கல் குவாரி தண்ணீரில் மிதந்த முதியவா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
Published on

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கல் குவாரி தண்ணீரில் மிதந்த முதியவா் சடலத்தை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கல் குவாரியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் கீழதிருத்தங்கல் பெரியாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (60) என்பது தெரியவந்ததது. இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com