சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவா் கைது

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிவகாசி அருகே தாய், மகனைத் தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பாரைப்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரிக்குமாா் (24). இவா் அதே பகுதியில் உள்ள பெண்ணைக் காதலித்து வந்தாா். இதையடுத்து, அந்தப் பெண்ணை தங்கராஜ் என்பவருக்கு அவரது பெற்றோா் திருமணம் செய்து கொடுத்தனா்.

இதன் பின்னா், அந்தப் பெண்ணுக்கும், தங்கராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் பெண் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாரிக்குமாா்தான் காரணம் என தங்கராஜ் கருதி வந்தாா். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், மாரிக்குமாா் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த தங்கராஜ் அவரைத் தாக்கினாா். இதைத் தடுக்க வந்த அவரது தாய் விஜயலட்சுமியையும் தாக்கினாா்.

இதில் காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கராஜை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com