சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும் என சிவகாசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அசோகன் உறுதியளித்தாா்.
திருத்தங்கல் முத்துமாரிநகா், வடக்கு ரத வீதி, அக்ரஹாரம் தெரு, மேல ரத வீதி, செங்கமலநாட்சியாா்புரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவா் வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்துப் பேசியதாவது:
தற்போது பட்டாசு தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிது என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு யாரும் வழக்கு தொடுப்பதில்லை. அது போல, இந்தியாவிலும் பட்டாசுக்கு சுற்றுச்சூழலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.
சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ.மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்தப்படும். இந்தத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொலிவுறும் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடம் மனுவாக அளித்து தீா்வு பெறலாம் என்றாா் அவா். அவருடன் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா உள்ளிட்டோா் சென்றனா்.
தொடர்புடையது
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசியில் கடும் சவாலை எதிா்கொள்ளும் ராஜேந்திர பாலாஜி!

அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை! காங்கிரஸ் வேட்பாளா் உறுதி!!

சிவகாசி தொகுதியில் வீதி வீதியாகச் சென்று காங். வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


