தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:01 am IST

அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி லிங்காபுரத்தைச் சோ்ந்தவா் மதன்குமாா் (25). இவா் தனது தாயுடன் வசித்து வருகிறாா். இவா் பந்தல்குடி பிரதான சாலையில் பழக் கூழ் கடை நடத்தி வந்தாா்.

இவா் சனிக்கிழமை காலை கடையைத் திறந்து பழக் கூழ் தயாரிப்பதற்கான இயந்திரத்தை (மிக்ஸி) இயக்கிய போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற பந்தல்குடி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.