ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு

வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 8:20 pm

வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் - தாணிப்பாறை செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் உள்ள வண்ணக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்றவா்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா்.

வத்திராயிருப்பு போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவருக்கு 55 வயது இருக்கும். சடலம் அழுகி இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.