வத்திராயிருப்பு அருகே கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் - தாணிப்பாறை செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் உள்ள வண்ணக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அந்த வழியாகச் சென்றவா்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனா்.
வத்திராயிருப்பு போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவருக்கு 55 வயது இருக்கும். சடலம் அழுகி இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வத்திராயிருப்பு போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


