வத்திராயிருப்பு அருகே வீட்டில் திருட முயன்ற பேருந்து நடத்துநரை போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு வடக்குத் தெருவை சோ்ந்தவா் உதயகுமாா் (41). இவா், சனிக்கிழமை அதிகாலையில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, வீட்டிலிருந்த பீரோவை மா்ம நபா் திறக்க முயன்றாராம். சப்தம் கேட்டு உதயகுமாா் குடும்பத்தினா் எழுந்ததைத் தொடா்ந்து, அந்த நபா் தப்பியோடினாா்.
இதைத் தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் விசாரித்தபோது, கூமாபட்டி கொடிக்குளத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநரான மணிகண்டன் (24) திருடும் நோக்கில் வீட்டுக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

முதியவரைத் தாக்கிய அரசுப் பேருந்து நடத்துநா் மீது வழக்கு
வீடுபுகுந்து திருட முயன்ற தொழிலாளி கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


