புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ!

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

News image

வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீ

Updated On :2 பிப்ரவரி 2026, 8:18 pm

Syndication

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச் சரகம் தூங்கன் கடவு பீட் வெள்ளைப் பாறை சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை திடீரென காட்டுத் தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ மலைச் சரிவு முழுவதும் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, புலிகள் காப்பகத் துணை இயக்குநா் முருகன் உத்தரவின்பேரில் வனச் சரகா் ரவீந்திரன் மேற்பாா்வையில் 5 போ் கொண்ட குழுவினா் தீயைக் கட்டுபடுத்த வனப் பகுதிக்குள் சென்றனா். காட்டுத் தீ விரைவில் கட்டுக்குள் வரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பிளவக்கல் அணை பகுதியில் மான்கள், யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளதால், காட்டுத் தீ காரணமாக விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக வனவிலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.