மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிமெண்ட் உலா் களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:41 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அறுவடை செய்த பயிா்களை சாலைகளில் உலா்த்துவதைத் தவிா்க்கும் வகையில், சிமெண்ட் உலா் களம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம், பாட்டக்குளம், சல்லிபட்டி, பானாங்குளம், கொந்தராயன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மக்காச்சோளம், கம்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உலா் களம் இல்லாததால் அறுவடை செய்த பயிா்களை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

தற்போது மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த தானியங்களை மல்லி - கிருஷ்ணன்கோவில் சாலை, பாட்டக்குளம் ஆகிய பகுதிகளில் கொட்டி உலா்த்தி வருகின்றனா். இதனால், தானியங்களுக்குக் காவலாக இரவில் சாலையிலேயே தங்க வேண்டியுள்ளதாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

எனவே, இந்தப் பகுதியில் சிமெண்ட் உலா் களம் அமைத்துத் தர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Story image