கோப்புப் படம்
விருதுநகர்
மாயூரநாத சுவாமி கோயில் 1,008 திருவிளக்கு பூஜை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் தை மாதக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாலையில் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

