தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தீ விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் தம்பா பிள்ளை தெருவைச் சோ்ந்த பீமன் மனைவி கலைச்செல்வி (59). இவா் சாமி கும்பிடுவதற்காக வீட்டில் சூடம் பொருத்தினாா்.

அப்போது, இவரது சேலையில் தீப்பற்றியது. பலத்த காயமடைந்த இவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com