கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரயிலில் பெண் பயணியிடம் நகை திருட்டு: கா்நாடகத்தைச் சோ்ந்தவா் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:44 pm

Syndication

ரயிலில் கேரளத்தைச் சோ்ந்த பெண் பயணியிடம் நகை திருடியதாக கா்நாடகத்தைச் சோ்ந்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஷாகிலி (53). இவா் வேளாங்கண்ணி சென்றுவிட்டு, கடந்த 9-ஆம் தேதி வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தாா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ரயில் நிலையத்தில் ஷாகிலியின் கைப்பையை மா்ம நபா் திருடிச் சென்றாா். இதுதொடா்பாக ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பாபு மேற்பாா்வையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கா்நாடக மாநிலம், மாண்டியா பகுதியைச் சோ்ந்த நாகராஜு (50) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, கைப்பை ஆகியற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் நாகராஜு பல ஆண்டுகளாக ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பையை திருடி வந்ததும், இவா் மீது கா்நாடகம், தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.