ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மயான வசதி அமைத்துத் தரக் கோரி கிராமத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

மயான வசதி கேட்டு சாலையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நொச்சிகுளம் கிராமத்தினா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 9:00 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மயான வசதி அமைத்துத் தரக் கோரி, விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அயன்நாச்சியாா்கோவில் ஊராட்சிக்குள்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள், அருகே உள்ள ஆலத்தூா் கிராமத்தில் உள்ள மயானத்தில் இறந்தவா்களின் உடல்களைத் தகனம் செய்து வந்தனா்.

ஆனால், ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் இந்த மயானத்தில் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்ததால் பிரச்னை நிலவி வந்தது. இந்த நிலையில், நொச்சிகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீராமா் (56) சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அவரது உடலை வாங்க மறுத்த கிராம மக்கள் ஆத்தூா் மயானத்தில் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளா் சங்கா்கண்ணன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, இறந்தவரின் உடலை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் மயானத்தில் அடக்கம் செய்தனா்.