நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

லாரி கவிழ்ந்ததில் மின் கம்பம் சேதம்

News image

ராஜபாளையம் அருகே லாரி கவிழ்ந்ததில் சேதமடைந்த மின் கம்பம்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:59 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்தது.

ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட் செல்வராஜ் (53). இவா், அரிசி ஆலைகளிலிருந்து சாம்பல் மூட்டைகளை லாரியில் வெள்ளிக்கிழமை ஏற்றிக்கொண்டு சென்றபோது அம்மையப்பபுரம் இளந்திரைகொண்டான் சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இதில் மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்தது. உடனடியாக அந்தப் பகுதியினா் ராஜபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் லாரியை மீட்டனா்.

இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை வரை மின்சாரம் தடைபட்டது. சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.