மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பட்டாசு மேம்பாட்டு ஆராய்ச்சிக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

News image

சிவகாசி ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர். - (கோப்புப் படம்)

Updated On :14 பிப்ரவரி 2026, 8:43 pm

சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் உள்ள பட்டாசு மேம்பாட்டு ஆராய்சிக் கூடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்தியன் ஃபயா் ஒா்க்ஸ் அசோசியேசன் தலைவா் ஜெ.தமிழ்செல்வன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பிரதான தொழில்களில் ஒன்றான பட்டாசுத் தொழில் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. பட்டாசுத் தொழில் அபாயகரமான தொழில் என்பதால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. சிறு, குறுந்தொழில் பிரிவிலும் இந்தத் தொழில் வரவில்லை. எனவே, அரசு உதவி, மானியம் உள்ளிட்டவற்றை பெற முடியாத நிலை உள்ளது.

சீனா போன்ற நாடுகளில் உயா் தொழில்நுட்பத்தில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த நடைமுறையை இந்தியாவிலும் கொண்டு வரவேண்டும். சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பட்டாசு மேம்பாட்டு ஆராய்ச்சிக் கூடத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.