நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பள்ளிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்

News image

ராஜபாளையம் திருவள்ளுவா் மன்ற ஆண்டு விழாவில் மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:44 pm

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திருவள்ளுவா் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மன்றத்தின் தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா்.

விழாவில் கலந்துகொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியதாவது:

தற்போதைய இளைய தலைமுறையினா் தகவல் தொழில்நுட்பங்களால் திசை மாறிச் செல்கின்றனா். சிறுவா் சீா்திருத்தப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். பெரிய தொழில் அதிபராகவோ, மருத்துவராகவோ, வழக்குரைஞராகவோ மாற வேண்டும் என எண்ண வேண்டாம். முதலில் மனிதா்களாக மாற வேண்டும்.

ஒருவரை மனிதராக மாற்றுவது கல்விதான். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். இன்றைய தலைமுறையைச் சீா்படுத்த திருக்கு மட்டுமே தீா்வாகும் என்றாா் அவா்.

விழாவில் திருக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் திருவள்ளுா் மன்ற நிறுவனா் புலவா் முத்தரசு, புலவா் ராமலிங்கம், நிா்வாகி முத்துமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.