மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:47 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் ஏ.ரெங்கசாமி, எஸ்.தளவாய் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும், உள்ளாட்சித் துறையில் 30 சதவீத இடங்கள் வேண்டும், ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.