நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிவராத்திரி வழிபாடு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:47 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி குலதெய்வ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள சடை உடையாா் சாஸ்தா கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடங்கள், பால் குடங்கள் ஆகியவை மேளதாளங்களுடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சடைஉடையாா் சாஸ்தாவுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், இரவு 12 மணிக்கு சாமக்கொடை சங்கிலிமாடசுவாமி, சுடலைமாடசுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிங்கத்திருளப்ப சுவாமி கோயில், சத்திரப்பட்டி கள்ளமறவன் கோயில், ஜவகா் மைதானம் அருகேயுள்ள அங்காள ஈஸ்வரி கோயில்களில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டிலும் திரளானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.