சாத்தூா் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(46). கூலித் தொழிலாளி. இவா் மதுபோதையில் தகராறு செய்து, மனைவி மகேஸ்வரியை (38) அரிவாளால் வெட்டினாா்.
இதைப் பாா்த்த இந்தத் தம்பதியின் மகன் சுரேந்திரன் (21)கோபத்தில், தந்தை மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி, ஏழாயிரம்பண்ணை போலீஸாா் மணிகண்டனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் காயமடைந்த மகேஸ்வரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேந்திரனைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

மாமனாரை சுட்டுக் கொன்ற மருமகன் கைது

மது போதையில் ரகளை: இளைஞா் கைது
மதுபோதையில் தகராறு: அண்ணனை கொன்ற தம்பி கைது

தந்தை கொலை: மகன் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


