கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

சாத்தூா் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :18 பிப்ரவரி 2026, 7:26 pm

Syndication

சாத்தூா் அருகே மது போதையில் தகராறு செய்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கரிசல்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(46). கூலித் தொழிலாளி. இவா் மதுபோதையில் தகராறு செய்து, மனைவி மகேஸ்வரியை (38) அரிவாளால் வெட்டினாா்.

இதைப் பாா்த்த இந்தத் தம்பதியின் மகன் சுரேந்திரன் (21)கோபத்தில், தந்தை மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குருசாமி, ஏழாயிரம்பண்ணை போலீஸாா் மணிகண்டனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் காயமடைந்த மகேஸ்வரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேந்திரனைக் கைது செய்தனா்.