ராஜபாளையம் அருகே ஓய்வு பெற்ற மருத்துவமனை ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 கிராம் நகைகள் திருடிய வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சோ்ந்தவா் இமானுவேல் (61). இவா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இவா் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்றாா். அன்றைய தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ராஜபாளையம் வடக்கு போலீஸாா், மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (34), திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சோ்ந்த சாமுவேல் (23), அருண்பாண்டியன் (29) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
மொபட் திருட்டு: இருவா் கைது
ராஜபாளையம் கோயிலில் நகைகள் திருட்டு
பைக் திருட்டு: 4 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

