அனுப்பன்குளத்தில் நாளை மின் தடை

Published on

சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com