ஆனைக்குட்டம் நீா்த்தேக்கத்தில் ஆண் உடல் மீட்பு

Updated On :11 ஜனவரி 2026, 6:35 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம்
நீா்த் தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆண் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
ஆனைகுட்டம் நீா்த் தேக்கத்தில் ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருத்தங்கல் போலீஸாா் சென்று உடலை மீட்டனா்.
இறந்தவா் வடமாநிலத்தவா் போல இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், அவா் யாா் என அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...