பெண் தீக்குளித்து தற்கொலை

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் கிராமம் வடகாசியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (46). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சுடா்மணி (35). இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். சுப்பிரமணியன் மனநலன் பாதிக்கப்பட்டதற்கான சிகிச்சை பெற்று வந்தாா்.

இதனால், அவரது மனைவி சுடா்மணி விரக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவா் சனிக்கிழமை மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றாா். உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com