சிவகாசி அருகே மனைவியைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி - சாத்தூா் சாலை சிவகாமிபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஜோசப் என்ற ஜெகநாதன் (60). இவரது, மனைவி தங்கவேலம்மாள் (57). இவா், அதே பகுதியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்து வந்தாா். ஜோசப் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வந்த ஜோசப், மனையுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்துக் கொலை செய்தாா்.
தவலறிந்து வந்த போலீஸாா் தங்கவேலம்மாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்த சிவகாசி கிழக்கு போலீஸாா் ஜோசப்பை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி கைது!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


