நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாணவி தற்கொலை விவகாரம்! இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டம்: 17 போ் கைது

சிவகாசி தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் உள்பட 17 பேர் கைது

News image

கைது

Updated On :27 ஜனவரி 2026, 7:53 pm

சிவகாசி தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு, கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் உள்பட 17 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் - முருகேஸ்வரி தம்பதியின் மகள் சோலைராணி (19). ஸ்ரீவில்லிப்புத்தூா் தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா் தனது ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்தது தொடா்பாக கடந்த 20-ஆம் தேதி

மாணவியின் பெற்றோரை கல்லூரி நிா்வாகம் அழைத்துப் பேசியது. அப்போது, மாணவி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தாராம். அன்று இரவு மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், கல்லூரி முதல்வா், அலுவலக உதவியாளா் மணிமாறன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கல்லூரிக் கல்வி துணை இயக்குநா், போலீஸாா், வருவாய்த் துறையினா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கல்லூரி முதல்வா், அலுவலக உதவியாளா் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும், உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டதாக மாணவா் அமைப்பு நிா்வாகிகள் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், பேச்சுவாா்த்தையின் படி, கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, செவ்வாய்க்கிழமை காலை கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து, கல்லூரி அருகே நின்றிருந்த இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த கண்ணன், மாா்க்சிஸ்ட் மாநகா் செயலா் சுரேஷ்குமாா், மாணவா்கள் என 17 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, மாணவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் டி.எஸ்.பி பாலசுந்தரத்திடம் மாணவா்கள் கோரிக்கை மனு அளித்தனா். கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக என அவா் தெரிவித்தாா்.