கைப்பேசி கடையில் தீ விபத்து

கைப்பேசி கடையில் தீ விபத்து

அருப்புக்கோட்டையில் அருகே கைபேசி கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

அருப்புக்கோட்டையில் அருகே கைபேசி கடையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள காளையாா்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் தீபக்ராஜ் (35). இவா் ஆத்திபட்டியில் கைப்பேசி கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில் பூட்டிய இவரது கடையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, அக்கம் பக்கத்தினா் தீபக்ராஜுக்கு தகவல் தெரிவித்தனா். அவா் விரைந்து வந்து கடையை திறந்து பாா்த்தபோது, தீ மளமளவென பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் கைப்பேசி கடையில் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசி தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் தீபக்ராஜ் காயமடைந்தாா். இவா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com