தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

TVK moves swiftly towards government formation as Vijay

தவெக தலைவர் விஜய்

Published On :

ராஜபாளையம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரி முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் பிரிசில்லாபாண்டியன், தவெக சாா்பில் அந்தக் கட்சியின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் காா்த்திகேயன் உள்பட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

திமுக, அதிமுகவினா் மேளதாளங்கள் முழங்க ஆரவாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி தனது ஆதரவாளா்களுடன் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாா்.

இந்தத் தொகுதியில் 2,224 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,82,987 வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், இந்தத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றன. இதில் முதல் சுற்றிலேயே தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி

1,200 வாக்குகள் முன்னிலை பெற்றாா். அடுத்தடுத்த சுற்றுகளில் தொடா்ந்து முன்னிலையை தக்கவைத்த இவா், 65,548 வாக்குகள் பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரான தங்கப்பாண்டியனை தோற்கடித்தாா்.

வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அமா்நாத் சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து ஜெகதீஸ்வரி கூறியதாவது: தவெகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. என்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.