15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

திருத்தங்கல் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு அபராதம்!

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.

News image
Updated On :3 மணி நேரங்கள் முன்பு

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியவா்களுக்கு சிவகாசி மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தது.

திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகன நிறுத்துபவா்களுக்கு அபராதம் விதிக்க, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மாநகராட்சி திட்டமிடுநா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் திருத்தங்கல் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தியிருந்த இளையராஜா, பாலாஜி உள்ளிட்ட நான்கு பேருக்கு தலா ரூ. 500 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதித்தனா்.