ஒருவர் புதிதாக செல்போன் வாங்கும்போது, அதில் பழைய செல்போனிலிருக்கும் தொடர்பு எண்களை மீட்டு, புதுப்பிப்பது, வாட்ஸ்ஆப் கணக்குகளை கொண்டு வருவது போன்றவை சற்று சவாலானதாக இருக்கலாம்.
அதுபோல, ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜிபே செயலியை புதிய செல்போனில் பதிவேற்றும்போது சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதிருக்கும்.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டை புதிய செல்போனுக்கு நேரடியாக மாற்ற வேண்டும். பிறகு ஜிபேவை பதிவிறக்கம் செய்து, அதில் வங்கிக் கணக்கை ஆக்டிவ் செய்ய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து குறுஞ்செய்தியை (SMS) அனுப்புவதன் மூலம் ஜிபே, ஒருவரது அடையாளத்தைச் சரிபார்க்கிறது.
ஒருவேளை, சிம்கார்டு இல்லாமல் இருந்தாலோ, சிம் கார்டில் எஸ்எம்எஸ் செல்லும் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டாலோ எஸ்எம்எஸ் அனுப்ப முடியாது. ஜிபேவை ஆக்டிவ் செய்ய முடியாது.
அடுத்து, எஸ்எம்எஸ் அனுப்பி, கணக்கை ஆக்டிவ் செய்ததும், உடனடியாக யாருக்கும் பெரிய தொகையை அனுப்ப முடியாது.
காரணம். 24 மணி நேர வரம்பு என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய செல்போனில் பழைய ஜிபே கணக்கை பதிவிறக்கம் செய்து ஆக்டிவ் செய்து சரியாக 24 மணி நேரம் வரை வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே வேறு ஒரு கணக்குக்கு அனுப்ப முடியும். அதை விட பெரிய தொகையை அனுப்ப வேண்டும் என்றால் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
ஒரு நேரத்தில் ஒரே போன்
ஜிபே செயலியில், ஒரு வங்கிக் கணக்கை, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரே ஒரு செல்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய செல்போனில் ஜிபேவை ஆக்டிவ் செய்ததும் பழைய செல்போனிலிருக்கும் ஜிபே செயலிழந்து போகும்.
லாக் வசதி
புதிய செல்போனில் ஜிபேவை திறக்க, பேட்டர்ன், பின் எண் அல்லது கைரேகை வைத்து திறக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதில் சிறந்ததை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
Summary
Using your old GPay account on a new mobile phone! Guidelines for activation!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை! பெரியகோயில் சாலையில் ஒரு வழிப்பாதை அமல்; வாகன ஓட்டுநா்கள் திணறல்

சப்தமாக பாடல் கேட்டால்.. மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய தகவல்!
விபத்தில் தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



