""பொதுவாகவே துணைப் பெயர்கள் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் இந்த துணைப் பெயர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒருவரின் துணைப் பெயரை வைத்து, அவர் இப்படிப்பட்டவர் என்று முடிவெடுப்பது கூடாது. நமது கையில் இருக்கும் ஐந்து விரல்களும் ஒன்றுபோலா இருக்கிறது? துணைப் பெயரைக் கொண்டு ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மேல் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பகைமை பாராட்டுவதும் பழிவாங்குவதும் இந்தியாவில் தற்போது பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. காந்தியை கோட்சே ஒருமுறைதான் கொன்றார். நாம் காந்தீயத்தை ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டும். அதற்காகத்தான் இந்த குறும்படத்தை வியாபார நோக்கமில்லாமல் எடுத்திருக்கிறோம். இதை மாணவச் சமுதாயத்திற்கும், சாதாரணக் குடிமகன் முதல் இந்தியாவின் முதல் குடிமகன் வரை எல்லோருக்கும் திரையிட இருக்கிறோம். இந்த குறும்படம் வரும் 24 அன்று ஹைதராபாத்தில் நடக்கும் தேசிய அளவிலான குறும்படத் திருவிழாவிலும், அடுத்து நடக்கவிருக்கும் கொல்கத்தா திரைப்பட விழாவிலும், உலக அளவில் புகழ்பெற்ற "கேன்ஸ்' திரைப்பட விழாவிலும் திரையிடப்பட இருக்கின்றது. தெலுங்கு மொழியில் படம் இருந்தாலும், நாடு முழுவதும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்கிலத்தில் வசனங்களை மொழிமாற்றம் செய்து சப்-டைட்டிலும் போட்டிருக்கிறோம். அதிகார மையங்களில் இருப்பவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இந்த குறும்படத்தை கொண்டு சேர்ப்பதே எங்களின் லட்சியம்!'' என்று ஆதங்கத்தோடு பேசும் நட்ராஜ் மகரிஷி (இதுவும் துணைப் பெயர்தான்!) ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக ஒரு ஹிந்தி படத்திற்கு பணிபுரிந்திருக்கிறார்.