கோடை டிப்ஸ்

* உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். * வேப்பிலை, துளசி இவற்றை காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க
கோடை டிப்ஸ்
Updated on
1 min read

* உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* வேப்பிலை, துளசி இவற்றை காயவைத்து பொடித்து வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், வெயில் கொப்பளங்களும் வராது.ய்

* மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளித்தால், வேனற் கட்டிகள், வியர்க்குரு ஆகியன நீங்கும்.

*  நா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.

* வெளியே கிளம்பும்போது அருநெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.

* உச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையோ, அல்லது ரோஜாப்பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.

* ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

* இளம் பச்சை நிற கர்ட்டன்களை வீட்டின் ஜன்னலில் தொங்க விடுவது குளிர்ச்சி தரும்.

* உடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

* மோரை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com