லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும் நான் டேஞ்சர் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலின். - (விடியோவிலிருந்து...)

Updated On :21 ஏப்ரல் 2026, 2:59 am

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் டேஞ்சர்தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வணக்கம்! எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? தேர்தல் பிரசாரம் எல்லாம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்தாலும், இந்த விடியோ மூலமாக உங்களிடம் மனது விட்டு பேசவேண்டும் என்று நினைக்கின்றேன்.

இன்னும் கொஞ்ச நாளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. இப்போது ஒரு சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின் போது, ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கருணாநிதி (Stalin is more dangerous than Karunanidhi) என்று சொன்னார்கள். கலைஞரோடு என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதைவிட தலைவர் என்று கூப்பிட்டதுதான் அதிகம்.

அப்படிப்பட்ட தலைவரைவிட நான் மிகவும் ஆபத்தானவர் என்று அவர்கள் கூறும்போது, எனக்கு ஒன்றேயொன்றுதான் தோன்றியது. தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், தமிழ்நாட்டில் வளர்ச்சியைத் தடுக்கவும் நினைப்பவர்களுக்கு நான் என்றுமே டேஞ்சர்தான். அந்த விஷயத்தில் கலைஞரைவிட ஒருபடி மேலே இருக்கின்றேன் என்றால், எனக்குப் பெருமைதானே. இது எல்லாமே தமிழர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது” என்றார்.

Summary

Chief Minister Stalin has stated that he poses a danger to those who seek to betray Tamil Nadu, as well as to those who attempt to hinder its growth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.