முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக, தமிழில் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கும் மேலும் சில வட சொற்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இங்கே பார்க்கலாம்.
வழக்கில் வழுக்கியவை
மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுத வேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்' என்று பேசுகிறார்கள். "ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?' என்று வினவுகிறார்கள். இந்த முழியும், முளியும் சரியானவையா? அல்ல. விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
"ஒரே நாத்தமடிக்குது. சகிக்க முடியலே' இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல். அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்)- பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல். இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. பெயர்ச் சொல்... கொஞ்சம் இலக்கணம் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 33
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.