""அவரு ஏன் தேர்தல்ல நிக்கறாரு?''
""நாற்காலியில உட்காரத்தான்!''
""நம்ம பையன் தொடர்ந்து பரீட்சையிலே முட்டை வாங்கி வர்றானே?''
""நீங்க தொடர்கதை எழுதரவங்க! உங்க மாதிரிதானே உங்க பையனும் இருப்பான்?''
""எங்க டாக்டர், பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு போவதற்கு முன்னதாகவே ரோஜாப்பூ மாலையைக் கழுத்திலே போட்டுடுவார்!''
""இந்தப் புலி ரொம்ப அழகா இருக்கு!''
""நான் சுட்ட புலி சம்பந்தி! வைக்கோலை அடச்சு வச்சிருக்கேன்!''
""குட்டி போட்டா ஒண்ணு குடுங்க!''
""இது எப்படி சம்பந்தி குட்டி போடும்?''
""அட, போட்டா ஒண்ணு குடுய்யா?''
""அப்பா! நம்ம நெலத்தை ஏலம் போடறாங்க!''
""அட போடா! நெல்லு போட்டேன் விளையல, கொள்ளு போட்டேன் விளையல, ஏலம் போட்டா விளையப் போவுது?''
மாஜிஸ்ட்ரேட்: ""ஏம்பா? நீ பசுமாட்டைத் திருடினதா கம்ப்ளைண்ட் குடுத்திருக்கிறாரே!''
திருடன்: ""எஜமான் நான் ஒரு பாவமும் அறியேனுங்க! நான் ஒரு முழம் கயித்தை திருடினேனுங்க! அதன் நுனியிலே ஒரு பசுமாடு இருந்ததை நான் கவனிக்கலேங்க!''
திருடன் முதன்முதலில் தன் பிள்ளையை ரயிலேற்றிவிடும்போது:
""எதுவும் ஆபத்துன்னா செயினைப் புடுச்சி இழு!''
""யாரு கழுத்துல கெடக்கிற செயினை அப்பா?''
""ரூபாய் பத்தாயிரம் கொடுத்து இரண்டு வருஷம் ஆவுது! எப்பதான் குடுக்கப் போறீங்க?''
""அதற்குத்தான் புளியாங்கொட்டை போட்டிருக்கேன். முதல் புளி உங்களுக்குத்தான்...''
""அது சரி! ராமசாமிகிட்டே வாங்கிய முப்பதாயிரம்?''
""ஏன் பேசமாட்டீங்க? உங்க கடனுக்குதான் வழிபொறந்திடுச்சே!''