500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிப்பது குறித்து...

News image

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலை - தமிழ்நாடு அரசு

Updated On :24 ஜூன் 2026, 9:31 am IST

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள மாநில வள பயிற்றுநர், மாவட்ட வள பயிற்றுநர், வட்டார வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விபரம் வருமாறு:

பணி: மாநில வள பயிற்றுனர் (SRP)

காலியிடம்: 1

சம்பளம் : மாதம் ரூ.25,000

தகுதி: சமூக அறிவியல், சமூக கல்வி, ஊரக வளர்ச்சி போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று பெண்கள் சுய உதவிக்குழுவில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: மாவட்ட வள பயிற்றுநர்

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று பெண்கள் சுய உதவிக் குழுவில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: வட்டார வள பயிற்றுநர்

காலியிடங்கள் 8

சம்பளம்: மாதம் ரூ.10,500

தகுதி : ஏதேனும் ஒரு முதுநிலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் ம் சுய உதவிக்குழு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 25 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tncdw.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், 2-வது தளம், A பிளாக், மாவட்ட ஆட்சியர் அலு வலகம், செங்கல்பட்டு மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 29.6.2026

Summary

Applications are invited for the post of Project Co-ordinator in Child Help Line Unit

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.