92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பட்டுக்கோட்டையின் கடைசிப் பாடல்!

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இறந்தபோது, அவரது பூதவுடலைச் சுற்றித் திரையுலகப் பிரமுகர்கள் கண்ணீரும்

News image
Updated On :16 நவம்பர் 2014, 4:08 am

த.சீ.பாலு

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இறந்தபோது, அவரது பூதவுடலைச் சுற்றித் திரையுலகப் பிரமுகர்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நடிகை பண்டரிபாய். அவரது கையில் அந்நேரம் ஒரு தாள் இருந்தது. அந்தத் தாளில்,

 தானா எவனும்

 கெட மாட்டான்

 தடுக்கி விடாம

 விழ மாட்டான்!

 போனா எவனும்

 வர மாட்டான் - மேலே

 போனா எவனும்

 வர மாட்டான் - இதப்

 புரிஞ்சிக்கிட்டவன்

 அழ மாட்டான்

என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் பாடல்தான், பட்டுக்கோட்டையார் கடைசியாக எழுதிய பாடலாகும். நடிகை பண்டரிபாய் தயாரிப்பில் உருவாக இருந்த "மகாலட்சுமி' படத்திற்காகக் கவிஞர் எழுதியிருந்த பாடல் அதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.