இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிட்ஸ்...

உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 6:20 am

வி.ந.ஸ்ரீதரன்


உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன் வழங்கும் விதிகள் எடுக்கப்பட்டன.  அதில் இருந்து உத்தரகாண்ட்  பிரிந்தபோது அங்கும்  அப்படியே தொடர்கிறது.

சிம்லாவிலுள்ள திறந்தவெளிச் சிறையில் கைதிகள் வெளியே சென்று தொழில் நடத்திவிட்டு  இரவு சிறைக்குத் திரும்பலாம்.  அதுமட்டுமல்ல; இந்தச் சிறையில்  செய்யப்படும் உணவு மிக நன்றாக இருப்பதால் அதை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம்.

"பெற்றால்தான் பிள்ளையா?' இது படத்தின் பெயரல்ல.  ஒய்.ஜி.பி  குழுவினர் நடத்திய நாடகத்தின் பெயர்.  இதுதான் பிறகு  "பார் மகளே பார்'  என்னும் திரைப்படமாக ஆனது.

"குலேபகாவலி'  படத்தில் வரும்  "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ'  என்னும் பாடல்  "கூண்டுக்கிளி'  படத்திற்காக எழுதப் பட்டது.  ஆனால், அப்படத்தில் இடம் பெறாமல்  பிறகு  "குலேபகாவலி'யில் இடம் பெற்றது.

இந்தியாவின் முதல் "கண் வங்கி'  சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சையும் இங்குதான் செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.