தமிழியக்க விழுதானது தாய்மண்ணில் வேரானது!

கண்ணீர் பரல் தெறிக்ககண்ணகி சிலையும் அழகாலம் நகலெடுக்க முடியா
தமிழியக்க விழுதானது தாய்மண்ணில் வேரானது!
Published on
Updated on
1 min read

கண்ணீர் பரல் தெறிக்க
கண்ணகி சிலையும் அழ
காலம் நகலெடுக்க முடியா
சீலச் சிலம்பொலி நின்றுவிட்டது!
அரும்பும் அக்கினிக் குஞ்சுகளை
அடைகாத்து வளர்த்து எடுத்து
சிவிலியாம்பட்டி திராவிடக் குயில்
சிறகுகளை உதிர்த்துக் கொண்டது
பாவேந்தர் படைவரிகளின்
பாடி வீடு சாய்ந்து விட்டது
சிந்தைக்கினிய சீறாவைப் 
பந்திவைத்த கரம் ஓய்ந்துவிட்டது
வல்அப்பன் பெரியார் கொடி வழி
செல்லப்பன் குருதிச்சித்திரம் காய்ந்து விட்டது
மேடைகளை விதவை ஆக்கி விட்ட
மேதமைத் தமிழ்ச் சான்றோர் இல்லை
இராவண காவியம் யாரிடம் கேட்போம்?
இலக்கியத் தமிழை எப்படி மீட்போம்?
விம்மும் நெஞ்சோடு தமிழியக்கம்
வீர வணக்கம் செலுத்துகிறது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com