

இந்திய சுற்றுலாக் கழகமானது புதிய சுற்றுலா இடங்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க அகில இந்திய அளவில் ஒரு போட்டியை நடத்தியது. அதில், சாகச பயணத்துக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமம் குத்லூரு.
கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட மங்களுரு மாவட்டத்தில் பெல்தங்கடி தாலுகாவில் இந்தக் கிராமம் உள்ளது. மங்களுரிலிருந்து 51 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கு என்ன அதிசயமா? ஒருசமயம் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட கிராமம். இன்று நிலைமை மாறிவிட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இந்தக் கிராமத்தில் அழகான மலைத் தொடர்கள், ஆர்பி நீர்வீழ்ச்சி உள்ளது. மலை ஏறுதலுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இங்கிருந்து 18 கி.மீ. தொலைவில் மற்றொரு சுற்றுலாத் தலமான மூடிபத்ரி உள்ளது. இங்கு ஆயிரம் தூண் ஜெயின் கோயில் உள்ளது. இது 'ஜெயினர்களின் தென்காசி' என அழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.