டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிரசவத்துக்குப் பின் உபாதைகள் குணமாக?

பல பெண்களும் நீங்கள் குறிப்பிடுவதைப் போல முக்குவதால், குழந்தை சாதாரண வழியில் பிறந்துவிட்டாலும்கூட மூலம், சோகை, மலச் சிக்கல் போன்ற உபாதைகளின் தாக்கம் தீவிரமடைந்து விடுவதால், உடலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2025, 6:30 pm

DIN

என் வயது நாற்பத்து ஒன்று. எனக்கு முப்பத்து ஆறு வயதாக இருக்கும்போது, இரண்டாவது பிரசவத்தில் அதிகம் முக்கியதால் குழந்தை பிறந்துவிட்டதனால், தற்சமயம் வரை வெளிமூலம், மலச்சிக்கல், சோகை நோய், குமட்டல், ருசியின்மை போன்ற உபாதைகளால் அவதியுறுகிறேன். இவை நீங்க ஆயுர்வேத மருந்து உள்ளதா?

ஸ்ரீவித்யா, தரங்கம்பாடி.

சிசேரியன், ஆயுதம் போட்டு எடுத்தல் போன்ற பிரசவ நேர அவசரச் சிகிச்சைகளைத் தவிர்க்க, பல பெண்களும் நீங்கள் குறிப்பிடுவதைப் போல முக்குவதால், குழந்தை சாதாரண வழியில் பிறந்துவிட்டாலும்கூட மூலம், சோகை, மலச் சிக்கல் போன்ற உபாதைகளின் தாக்கம் தீவிரமடைந்து விடுவதால், உடலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகிறது.

பெருங்குடல் சார்ந்த அபான வாயுவின் சீற்ற விசேஷத்தால், மலச்சிக்கல், மூலம் போன்ற உபாதைகள் தோன்றுவதால், அதை சீராக வேலை செய்வதற்கும், பெருங்குடல் பகுதியானது பொதுவாகவே வாயுவின் இயற்கை இருப்பிடமாக இருப்பதாலும், ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய் அருமருந்தாகப் பயன்படும்.

அதிலும், மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்படும் விளக்கெண்ணெய் மருந்துகள் ஆயுர்வேதத்தில் பல வகைகள் உள்ளன. நிம்பாஅமிருதாதி ஏரண்ட தைலம், நிர்குண்ட்யாதிஆமணக்கு எண்ணெய், கந்தர்வஹஸ்தாதி விளக்கெண்ணெய், ஹிங்குத்திரிகுணதைலம் என்று பல பெயர்களில் உடல்நிலைக்குத் தகுந்தவாறு மருந்துகள் விற்பனையிலுள்ளன.

இவற்றை உள்ளுக்குச் சாப்பிட்டுக் கொண்டே, வெளிப்புறத்திலும் இளஞ்சூடாக ஆசனவாய், தொப்புள், கீழ்வயிறு ஆகிய பகுதிகளில் தடவி, சிறிதுநேரம் ஊறிய பிறகு வென்னீரால் கழுவி விடலாம்.

இதனால் பெண்களுக்கு ஏற்படும் சூதகக்கட்டு, கருப்பை நழுவல், உதிரப் போக்கு வலி, அடிவயிறு உப்பிசம் போன்ற உபாதைகளும் நன்கு நீங்கிவிடும். உங்களுடைய உடல்நிலை அறிந்த மருத்துவரால் மட்டுமே இம்மருந்துகளின் சிறந்த தேர்வைத் தர முடியும்.

சோகை நோயின் தாக்கத்தினால் உடலுக்குத் தேவையான பிராண வாயுவின் வரவானது அணுக்களுக்குக் கிடைக்காமல் போவதால், அவை வரண்டு, உடல் போஷணையைப் பெறாமல் போவதால், மெலிந்து கருநிறங்கொண்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. கூடவே குமட்டலும், ருசியின்மையும் தங்களுக்கு இருப்பதால், 'மாதீபலரஸாயணம்' எனும் ஆயுர்வேத டானிக் மருந்தை பதினைந்து மில்லி காலை, இரவு உணவுக்குப் பிறகு அருந்தலாம். நல்ல பலனைத் தரக் கூடிய ஆயுர்வேத மருந்தாகும்.

இருபத்து ஐந்து கடுக்காய் தோடுகளைக் கட்டி (மூட்டையாக) ஆயிரத்து நூற்று முப்பத்து ஐந்து கிராம், நாகதந்தி மற்றும் கொடுவேலி வேர் சேர்த்து பனிரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து காய்ச்சி, கஷாயமாக்க வேண்டும். அதில் 1,165 கிராம் வெல்லம், வெந்துள்ள கடுக்காய்களை 190 மில்லி நல்லெண்ணெய்யில் வதக்கி, சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். அதில், 190 கிராம் சிவதை வேர், 46 கிராம் திப்பிலி மற்றும் சுக்குப்பொடி கலந்து வேகவிட வேண்டும்.

லேஹிய பதத்தில் இறக்கி, சூடு ஆறியவுடன் 190 கிராம் தேன் மற்றும் 12 கிராம் வீதம் சுக்கு, மிளகு, திப்பிலி நாககேஸரம் சேர்த்தால், அதற்கு 'தந்திஹரீதகீ' லேஹியம் என்று பெயர். 12 கிராம் லேஹியம், ஒரு கடுக்காய் என காலையில் சாப்பிட (உணவுக்கு முன்), மலச்சிக்கல் நீங்கும். கூடவே மண்ணீரல் சார்ந்த உபாதை, வீக்கம், குல்மம், மூலம், இதய நோய்கள், சோகை, மஞ்சள் காமாலை, கிராணி, குமட்டல், முறைக் காய்ச்சல், தோல் உபாதைகள் மற்றும் ருசியின்மை போன்ற உபாதைகள் பெண்களுக்கு மிக முக்கியமாக குணமாக்கித் தரும். இதை 'சக்கரத்தார்' எனும் முனிவர் பரிந்துரை செய்திருக்கிறார்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.