'எச்சில் இலைக்கு இரண்டு நாய் சண்டை போட்டுக்கிச்சு!'
'அடடா, அப்புறம்?'
'இதுதான் நேரம்னு வேற ஒரு நாய் இலையை காலி பண்ணிட்டுப் போயிடுச்சு!'
'புறாக்களை ஒழிப்பதில் மன்னர் தீவிரம் காட்டுகிறாரே, ஏன்?'
'புறாக்கள் இருப்பதால்தானே எதிரி போர் ஓலை அனுப்புகிறான்!'
'வேலை எதுவும் செய்யாமல் எதுக்கு வெட்டியா ஆபீஸ்ல உட்கார்ந்திருக்கே... வீட்டுக்குக் கிளம்பிப் போ!'
'வீட்டுக்குப் போனா என் மனைவி ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருப்பா, சார்!'
'ஊசிக்குப் போய் சின்ன புள்ள மாதிரி அழறீங்களே?'
'ஊசிக்காக அழல சிஸ்டர்... பீசை நெனச்சதும் கண்ணீர் தானா வருது!'
-வி.ரேவதி, தஞ்சை.
'இங்கே ரமேஷ் யாரு... அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு...'
'மேடம், அவங்களுக்கு முன்னாடியே நான் வந்தேன். எனக்கு ஒன்னும் சொல்லாமல் அவருக்குச் சொல்றீங்களே?'
'சிபிஐ டீம்ல நம்ம பையன் ஒருத்தன் இருக்கான்.'
'அப்படியா, ரொம்ப சந்தோஷம்... என்னவா இருக்காரு?'
'விசாரணைக் கைதியாத்தான்.'
-ராஜேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி .
'டூர் போன இடத்தில் எனக்கும் என் மனைவிக்கும் தகராறு வந்துருச்சு... உடனே ரூம் போட்டுட்டேன்.'
'எதுக்கு?'
'குடும்பச் சண்டை நாலு சுவத்துக்குள்ளேயே இருக்கணும்னுதான்!'
-ஜி சுந்தரராஜன், திருத்தங்கல்.
'உங்க தலை முடி கொட்டுதுன்னு எப்படிச் சொல்றீங்க?'
'வரும்போது தலைமுடியில ரப்பர் பேண்ட் போட்டுக்கிட்டு வந்தேன்... இப்ப ரப்பர் பேண்ட் மட்டும் தான் இருக்கு, டாக்டர்!'
'அவர் உன்னோட லிப்ஃட் பிரெண்டா... பைக்ல லிஃப்ட் கேட்டு பிரெண்ட் ஆகிட்டாரா?'
'இல்லை, என் ஆபீஸ்ல லிஃப்ட் ஆபரேட்டரா இருக்காரு... !'
'கல்யாணத் தரகரைக் கட்டிக்கிட்டது தப்பாப்போச்சா, ஏன்?'
'வீட்டுல என்ன வேலை பண்ணினாலும் கமிஷன் எதிர்பார்க்கிறாரு !'
-எம்.பி.தினேஷ், கோவை - 25.
'நேற்று ரயிலில் அப்பர் பெர்த் தான் கிடைத்தது... சரியா தூங்க முடியலை!'
'கீழே உள்ள பெர்த்தை கேட்டு வாங்க வேண்டியது தானே?'
'கீழே தான் யாரும் இல்லையே, நான் என்ன செய்ய?'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'புரோட்டா டேஸ்டா இருக்கு. புரோட்டா மாஸ்டரைக் கூப்பிடுங்க... பாராட்டணும்!'
'அவர் நேத்தே ஊருக்குப் போயிட்டார், சார்!'
-கோ.செழியன், உத்தமபாளையம்.
'புட்பால் வீரர்னு சொல்லி ஏமாத்தி மாப்பிள்ளை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு...'
'அப்ப, சரியான 'கோல்'மால் பேர்வழின்னு சொல்லுங்க!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'கால்நடை டாக்டரை கல்யாணம் செய்து கொண்டது தப்பாப்போச்சா, ஏன்?'
'எங்க போனாலும் நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறாரு!'
-தீபிகா சாரதி, சென்னை.
'ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஆள்கள் எப்படிக் கூடுகிறார்கள்?'
'ரேட் பேசி ஆள்கள் பிடிப்பதுக்குன்னே தலைவர் தனி டீம் வைத்துள்ளார்!'
'அந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரியான குடிகாரர்னு எப்படிச் சொல்றீங்க?'
'புதுசா வீட்டு மனை விற்கும் போது, 'டாஸ்மாக் கடை அருகில்'னு விளம்பரம் பண்றாரே!'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'அண்டை நாட்டு அரசரும் வீரத்தில் தங்களைப் போலவேதான், மன்னா!'
'எப்படித் தெரியும் புலவரே உமக்கு?'
'நான் அவர்கள் நாட்டுக்குச் சென்ற போது நிறைய இடங்களில் பதுங்குக் குழி தோண்டிக்கொண்டிருந்தார்கள், மன்னா!'
-பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.