ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

'தோபி ஜி'

சமையல் வேலையானது சிரமம் அல்ல; ஆனால், சமையலுக்குப் பின்னர் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வது மிகச் சிரமம்.

News image
Updated On :15 மார்ச் 2026, 3:52 pm IST

சமையல் வேலையானது சிரமம் அல்ல; ஆனால், சமையலுக்குப் பின்னர் பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்வது மிகச் சிரமம். அதுபோல, துவைத்துத் தேய்த்த உடை உடுத்தி அழகாக வருவது எளிது. ஆனால், அழுக்கான உடைகளைத் துவைத்து உலர்த்தி, சலவை செய்வது என்பது அனைவருக்கும் கடினம்தான். குடும்பத்தினருக்கே இப்படியென்றால், விடுதிகளில் தங்கியிருக்கும் இளையதலைமுறையினருக்கு எவ்வளவு பெரிய சுமை. அவர்களுக்குத் துவைக்கும் வேலை விடுமுறை நாள்களை விழுங்கிவிடும். இவர்களுக்காக, சலவைச் சுமையிலிருந்து விடுதலை தருகிறது 'தோபி ஜி' நிறுவனம்.

சென்னை வளசரவாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்ட 'தோபி ஜி', 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. தற்போது சுமார் 7,500 மாணவர்களுக்கு சேவை செய்யும் வகையில் விரிவடைந்துள்ளது.

இதுகுறித்து அதன் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான ரவி ரஞ்சன் கூறியது:

'தொடக்கத்தில் சலவைச் செயலியை அறிமுகப்படுத்தினோம். எங்கள் சலவை நிலையத்தில் ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வரும்வரையில் பிரச்னை இல்லை. வாடிக்கையாளர்கள் பெருகிவிட தாமதமான விநியோகம், வாடிக்கையாளர்களின் ஆடைகள் மாறிவிடுதல் என புகார்கள் வரத் தொடங்கின. குறையைக் கண்டுபிடித்து சரி செய்தோம்.

விடுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவுதான் முதல் பிரச்னை என்றால், துணி துவைப்பது இரண்டாவது பிரச்னை. தேர்வுக்குத் தயாராகும் மும்முரத்தில் அடுத்த நாள் அணிய உடையில்லை என்று தெரிந்தபோதுதான் அழுக்கான உடைகளைத் துவைக்கவில்லை என்பது நினைவுக்கு வரும். அத்தருணங்களில் மாணவர்கள் மன அழுத்தத்துக்கும், பதற்றத்துக்கும் ஆளாகின்றனர். இதுபோன்றவர்களிடம் பேசி சிரமங்களை அறிந்து, அதற்கு தீர்வாக 'தோபி ஜி' யை உருவாக்கினோம்.

வங்கிக் கடனுதவியுடன் குடும்பத்தினர், நண்பர்களிடம் கடன் பெற்று 'தோபி ஜி' என்னும் சலவை , உலர் சுத்தம் செய்யும் புதுமை மையத்தை உருவாக்கினோம்.

சம்பிரதாய சலவை முறைகளிலிருந்து விலகி, இயந்திரங்கள் மூலம் சிக்கனமான முறையில் நீர்நிலைகளை மாசுபடுத்தாமல் சலவை செய்யத் தீர்மானித்தோம்.

சலவைத் தொழிலாளர்களுக்குப் போதுமான பயிற்சி இல்லை என்பது மட்டுமல்ல; சமூகத்தில் சலவைக்காரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத உண்மையையும் தெரிந்து கொண்டோம்.

அனுபவம் இல்லாததால், தொடக்கத்தில் பல தவறுகளைத் தவிர்க்க முடியவில்லை. அதனால், தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டிவந்தது. சலவைத் தொழில் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத தொழிலாகவே இருந்து வருகிறது.

சலவை வணிகத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஒரு பிரச்னைதான். எங்கள் நீர்த் திறனுள்ள இயந்திரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 570 தண்ணீர்த் தொட்டிகளைக் கையாளும் தண்ணீர் அளவை சேமிக்கின்றன' என்கிறார் ரவி ரஞ்சன்.

'தோபி ஜி'யின் இன்னொரு இணை நிறுவனர் விதுஷா மணிமாறன்:

தொடக்கத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்த நான், தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளேன். ஒரு நாளில் சுமார் ஒரு டன் துணிகளை சலவை செய்கிறோம். 'தோபி ஜி'யை ஆசியாவின் முதல் சலவை, உலர் சுத்தம் செய்யும் புதுமை மையமாக தரம் உயர்த்தியுள்ளோம். மாணவர்கள் தங்கள் ஆடைகளைச் சலவை செய்வதில் நேரத்தை வீணாக்காமல், படிப்பில் கவனம் செலுத்த 'தோ பி ஜி' உதவுகிறது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் 'தோ பி ஜி' இணைந்து சலவைத் தொழிலாளர்களை நவீன சலவைத் தொழிலாளர்களாக மாற முறையான சலவைப் பயிற்சியை வழங்கி வருகிறது. இணையத்தில் பதிவு செய்தால், அழுக்குத் துணிகளை நேரில் சென்று பெற்று சலவை செய்து தேய்த்து நாங்களே விநியோகிக்கிறோம். அவசரம் என்றால் நான்கு மணிநேரத்தில் சலவை செய்து அளிக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.