விவசாய கதை 

டிபிகே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "டைட்டில்'. 
விவசாய கதை 


டிபிகே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "டைட்டில்'. 

விஜித், அஸ்வினி சந்திரசேகர்,  மைம் கோபி, மாரிமுத்து,  ரோபோ சங்கர், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். ரகோத் விஜய். படம் குறித்து இயக்குநர் பேசும் போது....  ""பெரும்பாலும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் ஊர்களில் விவசாயம் செய்கிறார்கள். அடுத்த தலைமுறை எல்லாம் வெவ்வேறு வேலைகளுக்கு போய் விட்டோம். தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை  விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பெற்றோர் விரும்பவில்லை.  

விவசாயம்தான் ஒரு தேசத்தின் ஆதாரம். அதை மெல்ல மெல்ல சாகடித்து விட்டால் என்ன ஆகும் இந்த தேசம். இதற்கு யார் பொறுப்பு. வீரிய விதையும் ஒட்டு விதையும் தந்து விவசாயத்தை கீழே இழுப்பது யார். இங்கே ஒரு விவசாயியை எப்படி மதிக்கிறது அரசும் சமூகமும்.   விவசாயிதான் இந்த நாட்டின் கதாநாயகன் என்பதை உணருகிற காலம் வந்து விட்டது. விவசாயத்தின் மீதான கடமையையும், கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை. இதுதான் படத்தின் கதை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com