ஒரு சமயம் தமிழ் வளர்ச்சிக்கு என்று புதிதாக ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதைக் கண்டு சர். ஆர்.கே சண்முகம் செட்டி சிரித்தார்.
ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ, பிரிட்டனிலோ தமிழை வளர்க்க நிறவனம் அமைத்தால் அதிலே அர்த்தம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இப்படி ஒன்று தோன்றுவது அதிசயமாக இருக்கிறது. இதைக் கண்டு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்று அவர் கூறினார்.