ரசிகர்களின் அன்பு

கடந்த 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள படம்  "ஜெய் பீம்'. படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது.
ரசிகர்களின் அன்பு


கடந்த 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள படம் "ஜெய் பீம்'. படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. "ஜெய் பீம்' திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது, ""24 ஆண்டுகள் ஆகிவிட்டன திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் படம் மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை. இது எனக்கு சவாலான படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க விடும்புகிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com