நமது உடலில் உள்ள பல விஷயங்கள் ஆச்சரியத்தை தருகின்றன. மனித மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது.. சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது.
நம்முடைய மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. ஒருவர் 35 வயதை எட்டியது முதல் தினமும் 7 ஆயிரம் நரம்பு செல்கள் இறந்துகொண்டே வருகின்றன.
மனித உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம், சுமார் 6 லட்சம் மைல்கள். மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செல், பெண்ணின் கரு முட்டை. சிறிய செல், ஆணின் விந்து. மனிதன் இறந்த பிறகு, அவனுடைய கண்கள் 30 நிமிடங்களும், மூளை 10 நிமிடங்களும், கால்கள் 4 மணி நேரமும், தசைகள் 5 நாட்களும், இதயம் சில நிமிடங்களும் இயக்க நிலையிலேயே இருக்கும்.