நான்கு விதமான கதைகள்

ஆந்தலாஜி படைப்பாக வெளிவந்துள்ளது "4 சாரி'.  4 விதமான கதைகள் அதில் மன்னிப்பு என்கிற வார்த்தை பிரதனமாக வருமாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு விதமான கதைகள்


ஆந்தலாஜி படைப்பாக வெளிவந்துள்ளது "4 சாரி'.  4 விதமான கதைகள் அதில் மன்னிப்பு என்கிற வார்த்தை பிரதனமாக வருமாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடம் பரவலான வரவேற்பு பெற்றுள்ள இப்படம் குறித்து இயக்குநர் சக்திவேல் பேசும் போது...   ""ஜான் விஜய், காளி வெங்கட், டேனியல், ரித்திகா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நான்கு வித்தியாசமான கதைகள். வாழ்க்கையில் தவறு செய்யும்போது அதை உணர்ந்து எப்படி மன்னிப்பு கேட்கிறோம் என்பதுதான் படத்தின் அடிநாதம்.  

டேனியல் நடித்த முதல் கதையில் தேவையில்லாத விஷயத்தில் சிக்கிக்கொள்ளும் போது, அதனால் ஏற்படும் நிகழ்வுகளை முழுக்க முழுக்க காமெடியாகவும், சாக்ஷி அகர்வால், கார்த்திக் நடித்துள்ள கதையில் நிச்சயதார்த்தம் அன்று அவர்களிடையே ஒரு பிரச்னை முளைக்கிறது. அதை அவர்கள் எப்படி மேற்கொள்கிறார்கள் என்பதையும் ,  காளிவெங்கட், ரித்விகா நடித்த மூன்றாவது கதையில் நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனிதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும், ஜான்விஜய் சஹானா நடித்துள்ள நான்காவது கதையில் "எங்கேயும் எப்போதும்' போல் சுவாரஸ்யமான பஸ் பயண கதையையும் சொல்லியுள்ளோம். 

இந்த வித்தியாசமான கதைக்களத்துக்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பு கொடுக்க வேண்டும். மீண்டும் உங்களை ஒரு புதிய முயற்சியில் சந்திக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com