இசை நிறுவனம்

சுந்தர்சியின் 19-ஆவது படத்தை வி. ஆர். டெல்லா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இசை நிறுவனம்


சுந்தர்சியின் 19-ஆவது படத்தை வி. ஆர். டெல்லா நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தயாரிப்புகளில் தொடர்ந்து இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது வோனி மியூசிக் என்ற  ஒலி-ஒளி நிறுவனத்தை தொடங்கி அதன் முதல் பாடலை வெளியிட்டுள்ளது. ஷீரடி சாய்பாபா குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை பிரபல பாடகி சாதனா சர்கம் பாடியுள்ளார். ஜெகனின் வரிகளுக்கு விக்னேஷ்வர் கல்யாணராமன் இசையமைத்துள்ளார்.  ஹிந்தி பதிப்பின் பாடல்வரிகளை ரிஷிகேஷ் பாதக் இயற்றியுள்ளார்.  

தகவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கெனவே தடம் பதித்துள்ளது வி. ஆர் டெல்லா நிறுவனம் புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

""எங்கள் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பாடல்களை வெளியிடுவதோடு, மற்ற திரைப்படங்களின் ஆடியோவையும் நாங்கள் வெளியிடுவோம். சுந்தர் சி நடித்து வரும் படப் பணிகள் அடுத்தடுத்த கட்டங்களுக்கு போகின்றன. "கட்டப்பாவ காணோம்' படத்தை இயக்கி மணி சேயோன் இந்த படத்தை இயக்குகிறார். தான்யா ஹோப்,  ஹெபா படேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சுவாரஸ்யமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை உள்ளிட்டவை விரைவில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com