பருவ காதல்

செளடேஸ்வரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " எப்போ கல்யாணம்' கே. எஸ். கோபலாகிருஷ்ணனின் இணை இயக்குநர் சிசிலியாராஜ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 
பருவ காதல்


செளடேஸ்வரி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " எப்போ கல்யாணம்' கே. எஸ். கோபலாகிருஷ்ணனின் இணை இயக்குநர் சிசிலியாராஜ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 

இது பற்றி இயக்குநர் பேசும் போது.. ""தற்போதைய தலைமுறை மாணவர்கள் காதலால் திசை திருப்பப்படுகிறார்கள் என்பதை கலகலப்பான முறையில் "எப்போ கல்யாணம்' பேசுகிறது. ஆண்மையும்  பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம்.  ஒருவரின் வலியை  இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனுஷங்களா ஆகிறோம் என்பது நம்பிக்கை.  

இதுதான் இந்தக் கதையின் கரு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் காதலை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது திரைக்கதையின் இன்னொரு சுவாரஸ்யம். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன'' என்றார்.   லிவிங்ஸ்டன், ரமா பிரபா, மகாநதி சங்கர், வினய் பிரசாத்,  ரத்ன மாலா, விஷ்வா, நிகில், செளமியா, ரகு, சான்ட்ரோ மிக்டெல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com